Sindhiya Venmani

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

பெண்ணென்னும் வீட்டில்
நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில்
நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்
இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு

தாய் தந்த பாசம்
தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே
காலங்கள் போற்றும்
கைதந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே
வீட்டுக்கும் நாட்டுக்கும்
நான் பாடும் பாட்டுக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
என் இன்ப கூட்டுக்கும்
என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே
வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானுடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு



Credits
Writer(s): Gangai Amaren, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link