Andhi Mazhai Pozhigirathu

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி)

தேனில் வண்டு மூழ்கும் போது பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்றாய் தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்றாய்
தனிமையிலே வெறுமையிலே எத்தனை நாளடி இளமையிலே
கேட்டன இரவுகள் சுட்டன கனவுகள் இமைகளும் சுமையடி இளமையிலே

(அந்தி)

தேகம் யாவும் தீயின் தாகம் தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில் சந்தனமாய் அணை பூசுகிறேன்

(அந்தி)



Credits
Writer(s): R Vairamuthu, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link