Thoongaatha Kannendru Ondru

தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
தூங்காத கண்ணென்று ஒன்று

முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று
உற்றாரும் காணாமல் உயிர் ஒன்று சேர்ந்தாட
உண்டாகும் சுவை என்று ஒன்று
தூங்காத கண்ணென்று ஒன்று

யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
யாரென்ன சொன்னாலும் செல்லாது
அணை போட்டு தடுத்தாலும் நில்லாது
தீராத விளையாட்டு திரை போட்டு
விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று
தீராத விளையாட்டு திரை போட்டு
விளையாடி நாம் காணும் உலகொன்று ஒன்று
தூங்காத கண்ணென்று ஒன்று

வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
விழி மட்டும் தனியாக வந்தாலும்
வெகுதூரம் நீ சென்று நின்றாலும்
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும்
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று
வருகின்ற விழி ஒன்று தருகின்ற பரிசென்று
பெறுகின்ற சுகமென்று ஒன்று
தூங்காத கண்ணென்று ஒன்று
துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று
தந்தாயே நீ என்னை கண்டு
தூங்காத கண்ணென்று ஒன்று



Credits
Writer(s): Kannadhasan, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link