Naanamo

நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

நாணுமோ இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
தோட்டத்து பூவினில் இல்லாதது
ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது
ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது

ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது
ஆடவர் கண்களில் காணாதது
அது காலங்கள் மாறினும் மாறாதது

காதலன் பெண்ணிடம் தேடுவது
காதலி கண்களை மூடுவது
அது எது
நாணுமோ இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ

மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலேமலர் செண்டாவது
மாலையில் காற்றினில் உண்டாவது
அது மஞ்சத்திலேமலர் செண்டாவது
கானலில் நீரினில் ஆடிடும் வேளையில்
காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது
உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
உண்டால் மயக்கும் கள்ளாவது
அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் நாடுவது
ஞானியின் கண்களும் தேடுவது
அது எது
நாணமோ இன்னும் நாணமோ
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன
நாணமோ நாணமோ

நாணுமோ இன்னும் நாணுமோ
தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ



Credits
Writer(s): Kannadhasan, Tiruchirapalli Krishnaswamy Ramamoorthy, Manayangath Subramanian Viswanathan
Lyrics powered by www.musixmatch.com

Link