Nanbanai Partha (From "Ninaithale Inikkum")

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞபகதில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்... ஹொஹொ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

சிறகு இல்லை வானம் இல்லை
வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒரு முறை தான்
துளி மிச்சம் இல்லாமல் ருசிப்போம்

கவலை இல்லை கபடம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ பெரு மழையோ
எங்கள் நெஞ்சை நிமிர்த்தி தான் நடப்போம்
வரும் காலம் நமதாகும்
வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம்

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

வித விதமாய் கனவுகளை
தினம் நெஞ்சினிலே நாங்கள் சுமப்போம்
பயமறிய பருவம் இது
நாங்கள் நினைபதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் இங்கு ஏதும் இல்லை
இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்
மழை தூவும் வெயில் நேரம் அதை போலே மனது
மலர் போலே தடுமாறும் வயது

ஹூ ஹூ... நானா நானா ந...
ஹூ ஒ ஹோ... நானா நானா ந...

நண்பனை பார்த்த தேதி மட்டும்
ஒட்டி கொண்டது என் ஞாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்... ஹொஹொ...
என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன்



Credits
Writer(s): Vijay Antony, Annamalai
Lyrics powered by www.musixmatch.com

Link