Yaarumilla (From "Kaaviyathalaivan")

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல்
உன்னை தேடும்

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்

யாருமில்லா தனி அரங்கில்
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல்
உன்னை தேடும்

யாருமில்லா தனி அரங்கில்

பேச மொழி தேவை இல்லை
பார்த்து கொண்டால் போதுமே
தனி பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே

சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்

யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல்
உன்னை தேடும்



Credits
Writer(s): A R Rahman, Pa. Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link