Thodu Vaanam

தொடு வானம் தொழுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்
தொடு வானமாய் பக்கமாகிறாய்
தொடும் போதிலே தொலைவாகிறாய்

தொடு வானம் தொடுகின்ற நேரம்
தொலைவினில் போகும்
அட தொலைந்துமே போகும்

இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

இலை மேலே பனித்துளி போல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எனை புதைகிறேன்

வலியென்றால் காதலின் வலிதான்
வலிகளில் பெரிது
அது வாழ்வினும் கொடிது
உனை நீங்கியே உயிர் கரைகிறேன்
வான் நீளத்தில் எனை புதைகிறேன்

இதயத்திலே தீ பிடித்து
கனவெல்லாம் கருகியதே
உயிரே நீ உருகும்முன்னே
கண்ணே காண்பேனோ

இலை மேலே பனி துளி போல்
இங்குமங்குமாய் உலவுகின்றோம்
காற்றடித்தால் சிதறுகின்றோம்
பொன்னே பூந்தேனே

காதல் என்னை பிழிகிறதே
கண்ணீர் நதியாய் வழிகிறதே
நினைப்பதும் தொல்லை
மறப்பதும் தொல்லை
வாழ்வே வலிக்கிறதே

காட்டில் தொலைந்த மழை துளி போல்
கண்ணே நீயும் தொலைந்ததென்ன
நீரினை தேடும் வேரினை போல
பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்

கண்கள் ரெண்டும் மூடும் போது
நூறு வண்ணம் தோன்றுதே
மீண்டும் கண்கள் பார்க்கும் போது
லோகம் சூன்யம் ஆகுதே

சிறுபொழுது பிரிந்ததற்கே
பலபொழுது கதறி விட்டாய்
ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ



Credits
Writer(s): Vairamuthu, Harris Jayaraj
Lyrics powered by www.musixmatch.com

Link