Deeyaalo Deeyaalo

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவான்னு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுனு
புரியாம போச்சே நண்பா

அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா
திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ

வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு
அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஏ வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

டீயாலோ டீயாலோ டீயாலோ

டீயாலோ டீயாலோ டீயாலோ
டீயாலோ டீயாலோ டீயாலோ



Credits
Writer(s): Yugabharathi, D. Imman
Lyrics powered by www.musixmatch.com

Link