Para Para

பற பற பற பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு
நீயே கன்னி தாயடி

உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும்
இருமுறை ஒரு வானவில் வருமா

பற பற பற பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

தேவாலயம் மெழுகும் நானே
திரி ஏறும் தீயும் நீயே
என் தேகம் கண்ணீர் விட்டு கரையுதே

மீன் கொத்த செல்லும் பறவை
மீன் வலையில் விழுந்தது போல
வாழ்க்கை உன் சாலை ஓரம் தவிக்குதே

மழையில் கழுவிய மணலிலே
தொலைந்த காலடி நானடி
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு
நிலைத்த முகவரி நீயடி

Petrol மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பற பற பற பறவை ஒன்று
கிறு கிறுவென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

என் உயிரை அர்ப்பணம் செய்தேன்
உன் பெயரை ஸ்தோத்திரம் செய்தேன்
சத்தியமும் ஜீவனுமாய் நிலைக்கிறாய்

பெற்றவரை வீட்டில் மறந்தேன்
மற்றவரை ரோட்டில் மறந்தேன்
மறதியிலும் உன் நினைவை வளர்க்கிறாய்

மங்கை என் குரல் கேளடி
நான் மதுவில் கிடக்கின்ற ஈ அடி
எனது அசுத்தங்கள் பாரடி
வந்து என்னை பரிசுத்தம் செய்யடி

Petrol மீது தீயை போல
உந்தன் மீது பற பற என பரவுது மனசு

பற பற பற பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா

ஓ அன்பே எந்தன் வாழ்வுக்கு
ஆசிர்வாதம் நீயடி
கண்ணீராடும் பிள்ளைக்கு
நீயே கன்னி தாயடி

உன்னை காண மீண்டும் மீண்டும்
கண்கள் தூண்டும்
இருமுறை ஒரு வானவில் வருமா

பற பற பற பறவை ஒன்று
கிரு கிரு வென தலையும் சுற்றி
உன் காலில் வீழ்ந்தது பெண்ணே ஜெபிக்கவா

அது பறந்திட வானம் இல்லை
அது இருந்திட பூமியும் இல்லை
உன் மார்பில் கூடு கட்டி வளர்க்கவா



Credits
Writer(s): Vairamuthu, N.r. Raghunanthan
Lyrics powered by www.musixmatch.com

Link