Devan Magale

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

என்றோ அடி என்றோ
உன் உயிரில் உரிமை தந்தாய்
இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய்
நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய்
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய்
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே
நான் முத்த சாவி போட்டு திறப்பேன்

தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

கண்ணீர் என் கண்ணீர்
என் கன்னம் காயும் முன்னே
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன்
கொடியில் ஒரு கொடியில்
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே
மடியில் உன் மடியில்
சிறு மரணம் கொண்டேன்

என் கர்தரங்கள் படைத்த
வேற்ற பாண்டம் நான்
அதில் உன்னை ஊற்றி
என்னை நிறைத்தாய்

தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகனே தேவன் மகனே
சிலுவை காடு பூத்தது போலே
சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி

தேவன் மகளே தேவன் மகளே
சிலுவை காடு பூத்தது போலே
சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே
தேவன் மகளே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி
தேவன் மகனே நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி



Credits
Writer(s): Vairamuthu, Nr Raghunathan
Lyrics powered by www.musixmatch.com

Link