Pemmanae

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ
வெய்யோனே மெய்யுருகி வீழ்கின்றோம்
வெந்தழிந்து மாய்கின்றோம் விதி இதானோ
புலம் பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன் கழிந்தோம்
அழுதழுது உயிர் கிழிந்தோம் அருள்கோனே

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ

சோறில்லை சொட்டு மழை நீர் இல்லை
கொங்கையிலும் பால் இல்லை கொன்றையோனே
மூப்பானோம் உருவழிந்து முடமானோம்
மூச்சுவிடும் பிணமானோம் முக்களோயே
ஊண்டெய்தோம் ஊணுருவி உயிர் ஓய்ந்தோம்
ஓரிழையில் வாழ்கின்றோம் உதய்கோனே

நீராகி ஐம்புலனும் வேராகி
பொன்னுலகம் சேறாகிப்போக மாட்டோம்
எம் தஞ்சை யாம் பிறந்த பொன் தஞ்சை
விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்
தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும்
தாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்
ஓம்... ஓம்... ஓம்...

பொன்னார் மேனியனே வெம்புலி தோல் உடுத்தவனே
இன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ
முன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சு உண்டவனே
பின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ

பெம்மானே பேருலகின் பெருமானே
ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ...



Credits
Writer(s): G. V. Prakash Kumar, R Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link