Venpanju

வெண்பஞ்சு மேகம் என்பேனா?
பொன் மஞ்சள் நேரம் என்பேனா?
கண் கொஞ்சும் கோலம் என்பேனா?
என் அன்பே என் அன்பே

சில்லென்ற சாரல் என்பேனா?
சில்வண்டு பாடல் என்பேனா?
உள்ளத்தின் தேடல் என்பேனா?
என் அன்பே என் அன்பே

என்னென்று உன்னை சொல்வது?
மொழி இல்லை சொல்ல என்னிடம்
பொய் இல்லை என்ன செய்வது?
எனதுள்ளம் இன்று உன்னிடம்

உன்னாலே உன்னாலே
மண் மேலே மண் மேலே

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ...

வெண்பஞ்சு மேகம் என்பேனா?
பொன் மஞ்சள் நேரம் என்பேனா?
கண் கொஞ்சும் கோலம் என்பேனா?
என் அன்பே என் அன்பே

கண்கள் இரண்டை காதல் வந்து சந்திப்பதேன்?
இல்லை இல்லை தூக்கம் என்று வஞ்சிப்பதேன்?
உள்ளம் உன்னை ஏந்திக்கொள்ள சிந்திப்பதேன்?
கொள்ளைக்கொண்டு போனப்பின்பும் மண்ணிப்பதேன்?

உன் கையை சேர்ந்திடவே
என் கைகள் நீளுவதேன்?
உன் பேரைக் கேட்டதுமே
தார்சாலைப் பூப்பது ஏன்?

உதடுகள் அடிக்கடி சிரிப்பதும் ஏன்?
முதுகினில் சிறகுகள் முளைப்பது ஏன்?
என் ஆசைகள் உன்னை சொல்வது
நீ ஆயுதம் இன்றிக் கொல்வது கொள்வதேன்

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ...

குட்டிக்குட்டி சேட்டை செய்து ஒட்டிக்கொண்டாய்
கொஞ்சிக்கொஞ்சிப் பேசி என்னை கொத்திச்சென்றாய்
தள்ளித்தள்ளிப் போனப் பின்னும் பக்கம் வந்தாய்
இன்னும் இன்னும் மேலே செல்ல றெக்கை தந்தாய்

எல்லாமே மாறிவிடும்
சொன்னாளே மீண்டுவர
சொல்லாமல் மாற்றத்தைத்
தந்தாயே நான் மலர

உன்னைவிட அதிசயம் உலகில் இல்லை
ஏய் அழகிய அவஸ்தையும் எதுவுமில்லை
என் தேவதை உன்னை எண்ணியே
நான் ஏங்கியதென்ன என்னையே

கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
கண்டேன் கண்டேன் காதலை
ஓஹோ ஹோ ஹோ ஹோ...



Credits
Writer(s): Premkumar Paramasivam, Vidya Sagar
Lyrics powered by www.musixmatch.com

Link