Naan Mozhi Arindhaen

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்

நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்

நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில்
நந்த வனம் போன இடம் நான் அறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நான் அறியேன்

காற்றை போல வீசியவள்
கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள்
ஊமை ஆகி போனதெங்கே
வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்

கண்ணிமையில் ஒரே ஆசை ஊஞ்சலிடும் வேளையில்
உண்மைகளை உள்மனதில் காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில்
முள் மடியில் தூங்கும் நிலை ந்யாயம் இல்லை

மேகம் நீங்கி போகும் என
நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை
கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே
நமது கையில் ஏதும் இல்லை

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்

நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே
இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்
அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில்



Credits
Writer(s): Yugabharathi, Vidyasagar
Lyrics powered by www.musixmatch.com

Link