Onakkaaga Poranthaenae

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்

என் உச்சி முதல் பாதம் வரை என் புருஷன் ஆட்சி
ஊர் தெக்கால தான் நிக்கும் அந்த முத்தாலம்மன் சாட்சி

எனக்காக பொறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி

ஒருவாட்டி என்ன உரசாட்டி
உன்ன உறுத்தும் பஞ்சணை மெத்தையும் ராத்திரி பூத்திரி ஏத்துற வேளையில
கருவாட்டு பான கெடச்சாக்க
பூன விடுமா சொல்லடி சுந்தரி நெத்திலி வத்தலு வீசுற வாடையில

பூவாட்டம் உட்காந்து மாவாட்டும் நேரம்தான்
உன் கைய நீட்டாத முந்தானை ஓரம்தான்
பூவாடை தூக்காத
பூபாளம் தாக்காத

நீ முத்தி போன கத்திரியா புத்தம்புது பிஞ்சி
நான் முந்தாநாளு ஆளானதா எண்ணுதோ உன் நெஞ்சு

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா

ஒதுங்காத தொட்டு உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சையா குத்தி வெச்சேன்
இது தாண்டி ரதம் இதுல தான் நெதம்
உன்னதான் ஒக்காரவெச்சு நான் ராசாதி ராசனா ஊர்கோலம் வந்திடுவேன்

ஒன்னோட நான் சேர தின்னேனே மண் சோறு
நேந்து தான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு
ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும்

நான் காத்தாட்டமா நாத்தாட்டமா உன்னால் எழும் நாளும்
நீ மாலையிடும் வேளை எது கேக்குது என் தோளும்

உனக்காக பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
ஒனக்கு மாலையிட்டு வருசங்க போனா என்ன
போகாது உன்னோட பாசம்



Credits
Writer(s): Vaalee, Justin Prabhakaran
Lyrics powered by www.musixmatch.com

Link