Uyire Uyire

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்துவிடு

காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர் தாங்கி நான் இருப்பேன்
மலர் கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயர் இல்லை கண்ணே
அதற்காக வா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழி போடும் பெண்ணே
அதற்காக தான் வாடினேன்
முதலா முடிவா
அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே
இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே
உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

காதல் இருந்தால்
எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால்
என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஆ-அ-ஆ-ஆ-ஆ
ஆ-அ-அ-ஆ
அ-ஆ-அ-ஆ-ஆ
ஆ-அ-அ-ஆ
அ-ஆ-ஆ-ஆ
ஆ-ஆ-ஆ-அ-அ

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்தபோது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி நேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பல தாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா
இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே
வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே
என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே
எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே
இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல்
வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல்
உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே
இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே
உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்



Credits
Writer(s): Na, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com

Link