Mella Sirithai (From "Kalyana Samayal Saadham")

காற்றில்
பூஞ்சிறகாய்
மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல
பறக்கிறதே

வானில்
முழுநிலவாய்
நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல
தெரிகிறதே

மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்

மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
உயிரோடு என் உயிர் கூட்டினாய்

தேகம் எங்கும்
ஒரு கோடி மின்னல்
பாயும் நாளும்

மீண்டும் மீண்டும்
உன்னை காண வேண்டும்
என்றே தோன்றும்

காதலில்
மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்

இமைகளும் சேராமல்
நீயும்
நானும்

இமைளும் சேராமல்
கதைகள் பேச
இரவுகள் கரை சேர்ந்ததே
ஓ... உறவுகள் உரையானதே

புதிதாக
சிறு சிறுவென என்னை சுற்றும் மோகம்
ஓ... இதழில் சுகமாய்
கவிதைகள் நாம் பாடலாம்

மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்

காற்றில்
பூஞ்சிறகாய்
மனதை கட்டித் தூக்கிச் செல்வது போல
பறக்கிறதே

வானில்
முழுநிலவாய்
நம்மை மட்டும் ஏந்திக் கொள்வது போல
தெரிகிறதே

மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்

மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
உயிரோடு என் உயிர் கோர்க்கிறாய்

தேகம் எங்கும்
ஒரு கோடி மின்னல்
பாயும் நாளும்
ஓஹோ...

மீண்டும் மீண்டும்
உன்னை காண வேண்டும்
என்றே தோன்றும்

காதலில்
மெல்ல சிரித்தாய்
என் உள்ளம் சரித்தாய்
விழியாலே நீ எனை தீண்டினாய்



Credits
Writer(s): Navin Chandar S, Muthtamil Muthtamil
Lyrics powered by www.musixmatch.com

Link