Kaathirunthaai Anbe (From "Naveena Saraswathi Sabatham")

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

பூக்களை திறக்குது காற்று, புலங்களை திறக்குது காதல்
உடைந்தது மறைந்தது ஊடல், காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல், இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல், காதல் செய்வோம்

காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே (அன்பே, அன்பே)

நீ சொல்லிய மெல்லிய சொல்லிலே என் தலை சொர்க்கத்தை முட்டுதடி
நீ சம்மதம் சொல்லிய நொடியிலே ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி
என் ஆவலை வாழ வைத்தாய் என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய் (நீள வைத்தாய்)
என் பூமியை எடுத்துக் கொண்டாய் உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

ஆஹா... ஹா...
காதலனே உன்னை துடிக்கவிட்டேன்
கண்களை வாங்கி கொண்டு உறங்கவிட்டேன் என் உயிரே
உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்
இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்
சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

என் செங்குயிலே, சிறு வெயிலே, சிற்றழகே I love you
ஹே பொர்பதமே, அற்புதமே, சொர்பனமே I love you
என் செங்குயிலே, சிறு வெயிலே (வெயிலே), சிற்றழகே I love you
ஹே பொர்பதமே, அற்புதமே (குயிலே), சொர்பனமே I love you

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே
ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே
உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே
என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

கடலோடு சேரும் வான் மழைத்துளி போல்
உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்
உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்
நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

பூக்களை திறக்குது காற்று, புலங்களை திறக்குது காதல்
உடைந்தது மறைந்தது ஊடல், காதல் செய்வோம்
ஒருமுறை மலர்வது காதல், இருவரும் கலந்தபின் தேடல்
முதல் எது முடிவது காதல், காதல் செய்வோம்

காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே
காத்திருந்தாய் அன்பே
நான் பூத்திருந்தேன் முன்பே

என் செங்குயிலே, சிறு வெயிலே, சிற்றழகே I love you
ஹே பொர்பதமே, அற்புதமே, சொர்பனமே I love you
என் செங்குயிலே, சிறு வெயிலே, சிற்றழகே I love you
ஹே பொர்பதமே, அற்புதமே, சொர்பனமே I love you



Credits
Writer(s): Vairamuthu, Prem Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link