Antha Vanatha Pola Manam

அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மாறி போன போதும் இது தேரு போகும் வீதி
வாறி வாறி தூற்றும் இனி யாரு உனக்கு நாதி
பாசம் வைத்ததாலே நீ பயிரை காத்த வேலி
பயிரை காத்த போதும் வீண் பலியை சுமந்த நீதி

சாமி வந்து கேட்டிடுமா, வீண் பலியை தீர்த்திடுமா
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படச்ச தென்னவனே

நெஞ்சம் என்னும் கூடு அதில் நெருப்பு வைத்ததாரு
துன்பம் வந்த போதும் அதை துடைப்பதிங்கு யாரு
கலங்கும் போது சேறு அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதைத் திருத்தப் போவதாரு

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படச்ச தென்னவனே

மஞ்சளிலே ஒரு நூலெடுத்து
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்பந்தம் உண்டுன்னு சொன்னது யாரு
அது மன்னவன் பேரு

அந்த வானத்தப்போல மனம் படச்ச மன்னவனே
பனித்துளியப் போல குணம் படச்ச தென்னவனே



Credits
Writer(s): Ilaiyaraja, R.v. Udyakumar
Lyrics powered by www.musixmatch.com

Link