Paapam Seyathiru

பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே

சாபங்கொடுத்திட லாமோ விதி
தன்னைநம் மாலே தடுத் திடலாமோ
கோபந் தொடுத்திட லாமோ இச்சை
கொள்ளக் கருத்தைக் கொடுத்திட லாமோ

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே

சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்
சொல்லருஞ் சூதுபொய் மோசம் செய்தாற்
சுற்றத்தை முற்றாய்த் துடைத்திடும் நாசம்

நல்லபத் திவிசு வாசம் எந்த
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
நாளும் மனிதர்க்கு நன்மையாம் நேசம்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே

நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
நல்லவர் தம்மைத்தள் ளாதே அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே

பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே
பொல்லாங்கில் ஒன்றுங்கொள் ளாதே கெட்ட
பொய்ம்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே

பாபஞ்செய் யாதிரு மனமே மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே

மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
மெய்ஞ்ஞானப் பாதையி லேறு சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு

அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு

பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே

நல்ல வழிதனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
நல்ல வழிதனை நாடு எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக்கொண் டாடு

பாபஞ்செய் யாதிரு மனமே மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
பாபஞ்செய் யாதிரு மனமே மனமே



Credits
Writer(s): A.r. Rahman, R Parthiban
Lyrics powered by www.musixmatch.com

Link