Mayava Thooyava

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழலூதவா
இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகாணம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா
கண்ணாவா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா

பூக்களைக் கோர்க்கின்ற சரங்களிலே
ஏக்கங்கள் கோர்த்திவள் காத்திருக்க
யாக்கையில் அணிந்திட வா
ஆணிரை தூங்கிடும் இரவினிலே
அதிராமல் ஆடிட வா
உதிராமல் சூடிட வா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா
மாதவா யாதவா குழலூதவா
இதழோடு இசையாக வா

உன் மார்பே என் மாகாணம்
உன் பார்வை என் பூங்கானம்
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே
என் நாவா உன் நாவா கண்ணாவா

மாயவா தூயவா மலர் சூட வா
மழையாகி எனில் வீழ வா



Credits
Writer(s): A.r. Rahman, Madhan Karky
Lyrics powered by www.musixmatch.com

Link