Oru Naal Pothuma

ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா
கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா
சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

ராகமா
சுக ராகமா
கானமா
தேவ கானமா
ராகமா
சுக ராகமா
கானமா
தேவ கானமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா
கீதமா

அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும்
யாழென்றும்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்
எனை அறியாமல்

எதிர்ப்போர்கள்
எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி வருவாரன்றோ
எழுந்தோடி
தோடி
இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில்
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ

கலையாத மோகன சுவை நானன்றோ
மோகன சுவை நானன்றோ
மோகனம்
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா ஆ
என் பாட்டு தேனடா
இசை தெய்வம் நானடா



Credits
Writer(s): Kannadhasan, K V Mahadevan
Lyrics powered by www.musixmatch.com

Link