Pookkal Pookkum

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ...
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே... பூந்தளிரே...

வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே
வேறின்றி, விதையின்றி, வின் தூவும் மழையின்றி
இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே
வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி
இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே

இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே...

Oh where would I be, without this joy inside of me
It makes me want to come alive, it makes me want to fly into the sky
Oh where would I be, if I didn't have you next to me
Oh where would I be, oh where, oh where

எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே
எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே
யாரென்று அறியாமல் பேர் கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே

பாதை முடிந்த பிறகும், இந்த உலகில், பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்
இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, இது எதுவோ...

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே, பார்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போக வில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே,என்ன புதுமை...
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே...
இது எதுவோ...



Credits
Writer(s): Na. Muthukumar, G.v. Prakesh Kumar
Lyrics powered by www.musixmatch.com

Link