En Kanmani (From "Chittukkuruvi")

என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
நன்னா சொன்னேள் போங்கோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி...

இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறுமில்லை கவனங்களில்

இலமா மயில்
அருகாமையில்
வந்தாடும் வேலை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்லவில்லையோ
இந்தாமா கருவாட்டு கூடை முன்னாடி போ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி...

தேனாம்பேட்டை supermarket இறங்கு
மெதுவாக உன்னை கொஞ்சம் தொட வேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்க்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாள சின்னம் ஒன்று தர வேண்டுமே

இரு தோலிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமொன்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி இல மாங்கனி
உன்னை பார்த்ததும் சிரிக்கின்றதேன்
சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன்
எனை பார்த்ததும்
ஓராயிரம் கதை சொல்கிறான்
கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ
என் கண்மணி...



Credits
Writer(s): Vaalee, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link