Maanguyilae (Solo)

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்து செம்பு
அத தொட்டெடுத்து தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு
இப்போ கிட்ட வந்து கிளருதடி என்னப் படு ஜோரு

கண்ணுக்கழகா பொண்ணு சிரிச்சா
பொண்ணு மனச தொட்டு பறிச்சா
தன்னந்தனியா எண்ணி ரசிச்சா
கண்ணு வலை தான் விட்டு விரிச்சா

ஏறெடுத்து பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
சீரெடுத்து வாரேன் யம்மா சோ்த்து என்னைத் தேத்து
முத்தையன் படிக்கும் முத்திரைக் கவிக்கு
நிச்சயம் பதில் சொல்லணும் மயிலு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன்
யம்மா கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரிய
வங்கத்துல வெளஞ்ச மஞ்சள் கெழங்கெடுத்து ஒரசி
யம்மா இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி

கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
சம்மதமுன்னு சொல்லு கிளியே

சாமத்தில வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
கோவப்பட்டு பாத்தா யம்மா வந்த வழி போறேன்
சந்தனம் கரைச்சிப் பூசனும் எனக்கு
முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணால
நான் சுத்தி வந்தேன் பின்னால

மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு
உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link