Mariyamma Mariyamma

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா
காத்தும் கனலும் நீயம்மா
வானத்தபோல் நின்னு பாரம்மா
வந்தேன் தேடி நானம்மா

இந்த மனம் முழுதும் நீதானே
வந்த வழி துணையும் நீதானே
தங்க திருவடிய தொழுதோமே
இங்கு மனம் உருக அழுதோமே
சீரேஸ்வரி காமேஸ்வரி
வேறாரு நீதானே காப்பு

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

வானெல்லாம் வாழ்த்துத்தான் கேட்கட்டும்
வாழ்வே வளமே பாக்கட்டும்
நீ எங்க தாய் என்று காணட்டும்
நிழலும் நிஜமா மாறட்டும்

சக்தி முழுதும் தந்து காப்பாயே
முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே
பக்தி மனம் விரும்பும் என் தாயே
நித்தம் பரிதவிக்கும் உன் சேயே
சாட்சி சொல்லும் தாயே துணை
தீயெல்லாம் பூவாக மாறட்டும்

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
கரு மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா



Credits
Writer(s): Gangai Amaran, Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link