Unnai Naan Paarthen

உன்னை நான் பார்த்தேன்
என்னை நீ பார்த்தாய்
நம்மை நாம் பார்க்கத்தானே ஏன் மறந்தோம்?
பக்கத்தில் இருந்தோம்
வெட்கத்தில் இருந்தோம்
முத்தத்தில் நம்மை நாமே ஏன் இழந்தோம்?

யாரும் இல்லா
தீவைத் தேடி நாம் செல்வோம்
யாரும் சொல்லா
கவிதைச் சொல்லி நாம் மகிழ்வோம்
ஹையோ வா-வா-வா நீ சீக்கிரமே

உன்னை நான் பார்த்ததாலே
என்னை நீ பார்த்தாய்
நம்மை நாம் பார்க்கத்தானே ஏன் மறந்தோம்?

பதினெட்டு வருடம், நான் வாழ்ந்த வாழ்க்கையை
பதினெட்டே நொடியில், நீ பொய் என்றாய்
உயிரோடு என்னை, நீ சிற்பமாக்கினாய்
உயிரற்ற என்னை நீ என் செய்வாய்?

காதல் தான் ஆயுள் கைதியாய்
தரை பாய்ந்து மண்ணில் வாழனும்
ஐயோ பாவம் காதல் நம்மின் பிள்ளை

உன்னை நான் பார்த்தேன்
என்னை நீ பார்த்தாய்
நம்மை நாம் பார்க்கத்தானே ஏன் மறந்தோம்?

ஆசைகள் எல்லாம், இனி ஆடை கேட்குமோ?
என் பாத விரல்கள், இனி பூப் பூக்கும்
நான் தூங்கும் அரையில் உன் வாசம் வீசுமோ?
என் சுவாசம் கூட உன் பேர் சொல்லும்
உயிர் மட்டும் இருக்கும் மந்திரம்
என் தேகம் உனக்கு மாத்திரம்
பெறவா, தரவா? உன்னை சீக்கிரமே

உன்னை நான் பார்த்ததாலே
என்னை நீ பார்த்தாய்
நம்மை நாம் பார்க்கத்தானே ஏன் மறந்தோம்?

யாரும் இல்லா
தீவைத் தேடி நாம் செல்வோம்
யாரும் சொல்லா
கவிதைச் சொல்லி நாம் மகிழ்வோம்
ஹையோ வா-வா-வா நீ சீக்கிரமே

உன்னை நான் பார்த்ததாலே
என்னை நீ பார்த்தாய்
நம்மை நாம் பார்க்கத்தானே ஏன் மறந்தோம்?



Credits
Writer(s): Snehan, Yuvanshankar Raja
Lyrics powered by www.musixmatch.com

Link